இலங்கை இந்திய தூதரகத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகள்- சிபிஎம் கோரிக்கை
ராமேஸ்வரம்: இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை கடற்படையின் அத்து மீறலை கண்டித்து பாம்பனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாம்பனை சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்று பொய் வழக்கு போட்டுள்ளனர். இந்த வருடம் மட்டும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுமார் 42 பேர் பிடித்து செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களோடு 13 படகுகளும் பிடித்து செல்லப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர், கிறிஸ்டி, சந்தியாகு என்ற மூன்று மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை மத்திய அரசு நியமிக்க வேண்டும். இதற்காக ஜனநாயக ரீதியில் போராடுவோம். தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துவோம்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் குடும்பத்தினர்ககு நாள் ஒன்றுக்கு ரூ.50 வழங்கி வந்தது. அந்த தொகை தற்போது ரூ.20ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை மீண்டும் ரூ.50 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும்.
புதுக்கோட்டையில் நடக்கும் கட்சியின் மாநில குழுக் கூட்டதில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications