அக்டோபரில் சந்திரனுக்கு ஆள் இல்லாத விண்கலம்: இஸ்ரோ
சென்னை: சந்திரனுக்கு ஆள் இல்லாத விண்கலம் வரும் அக்டோபர் 2வது வாரத்தில் அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.
சென்னையில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் பல அறிவியல் தொழில்நுட்ப சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்தியா, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது.
மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அதற்கான பணி தொடங்கப்படும். விண்வெளியின் அதிக வெப்பம், அதிக குளிர் இரண்டையும் தாங்கக் கூடிய ஏற்பாடுகளை அதில் செய்வோம். இந்த பணியை செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளோம்.
சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் முதல் திட்டத்தில் செயற்கை கோள் வடிவமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இது முடிவடைந்த 45 முதல் 50 நாட்களில் விண்ணில் அது ஏவப்படும். அக்டோபர் மாதம் 2வது வாரத்திற்குள் விண்கலம் செலுத்த வாய்ப்புள்ளது. ஆனால் தேதி முடிவு செய்யப்படவில்லை.
வரும் 2011-12ல் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் 2வது திட்டத்தை இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த விண்கலம் சந்திரனை சுற்றி வரவும், சந்திரனில் உள்ள பொருட்களின் மாதிரிகளை சேகரிக்கவும் செய்யும்.
அடுத்த மார்ச் மாதத்திற்குள் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் அனுப்பப்படும். ஜிஎஸ்எல்வியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரியோஜினிக் என்ஜின் பயன்படுத்தப்படும்.
கான்பூர் ஐஐடி, வேலூரில் உள்ள விஐடி, சத்யபாமா பல்கலைக்கழககம் ஆகியவை சிறிய மற்றும் மிகச் சிறிய செயற்கை கோள்களை உருவாக்க அனுமதி கேட்டுள்ளன என்றார் அவர்.
-
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல்












Click it and Unblock the Notifications