அக்டோபரில் சந்திரனுக்கு ஆள் இல்லாத விண்கலம்: இஸ்ரோ
சென்னை: சந்திரனுக்கு ஆள் இல்லாத விண்கலம் வரும் அக்டோபர் 2வது வாரத்தில் அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.
சென்னையில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் பல அறிவியல் தொழில்நுட்ப சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்தியா, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது.
மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அதற்கான பணி தொடங்கப்படும். விண்வெளியின் அதிக வெப்பம், அதிக குளிர் இரண்டையும் தாங்கக் கூடிய ஏற்பாடுகளை அதில் செய்வோம். இந்த பணியை செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளோம்.
சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் முதல் திட்டத்தில் செயற்கை கோள் வடிவமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இது முடிவடைந்த 45 முதல் 50 நாட்களில் விண்ணில் அது ஏவப்படும். அக்டோபர் மாதம் 2வது வாரத்திற்குள் விண்கலம் செலுத்த வாய்ப்புள்ளது. ஆனால் தேதி முடிவு செய்யப்படவில்லை.
வரும் 2011-12ல் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் 2வது திட்டத்தை இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த விண்கலம் சந்திரனை சுற்றி வரவும், சந்திரனில் உள்ள பொருட்களின் மாதிரிகளை சேகரிக்கவும் செய்யும்.
அடுத்த மார்ச் மாதத்திற்குள் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் அனுப்பப்படும். ஜிஎஸ்எல்வியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரியோஜினிக் என்ஜின் பயன்படுத்தப்படும்.
கான்பூர் ஐஐடி, வேலூரில் உள்ள விஐடி, சத்யபாமா பல்கலைக்கழககம் ஆகியவை சிறிய மற்றும் மிகச் சிறிய செயற்கை கோள்களை உருவாக்க அனுமதி கேட்டுள்ளன என்றார் அவர்.
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications