For Quick Alerts
For Daily Alerts
Just In
திட்டமிட்டபடி ஓகனேக்கல் திட்டம் நிறைவேற்றப்படும்: துரைமுருகன்
சென்னை: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் குறித்த காலத்தில், திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் திட்டம். இது நிச்சயம் நிறைவேற்றப்படும். திட்டமிட்டபடி, குறித்த காலத்தில் இத்திட்டம் நிறைவேறும்.
இத்திட்டத்தை உரிய காலத்தில் நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது. இத்திட்டம் குறித்து கர்நாடக முதல்வர் பேசியுள்ளது குறித்து பரபரப்பாக பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்த தமிழக அரசு விரும்பவில்லை. இத்திட்டத்தை திட்டமிட்ட காலத்தில் நிறைவேற்ற அரசு உறுதியுடன் உள்ளது என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார் துரைமுருகன்.
Comments
Story first published: Friday, August 8, 2008, 16:43 [IST]