For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோட்டத்தில் பதுங்கி இருந்த 3 பேர் கைது-தீவிரவாதிகளா?

By Staff
Google Oneindia Tamil News

ஆழ்வார்குறிச்சி: கடையம் அருகே தோட்டத்தில் பதுங்கியிருந்த 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் தீவிரவாதிகளா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா கடையம் சரகம் மீனாட்சிபுரம் (சிவசைலம் அருகே உள்ளது) ஒரு தோட்டத்தில் 3 பேர் கடந்த 3 நாட்களாக பதுங்கி இருப்பதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து மாவட்ட தனிப்பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.. இதைத் தொடர்ந்து அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் தனிப்பிரிவு போலீஸ் படையினர் மீனாட்சிபுரத்திற்கு சென்று தோட்டத்தில் பதுங்கியிருந்த 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் 3 பேரும் அங்கிருந்து அம்பை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பிடிப்பட்ட 3 பேரின் பெயர்கள் வருமாறு:

1. அன்வர்
2. வினோத்
3. அனில்தாஸ்

இவர்கள் 3 பேரும் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். இவர்கள் நக்ஸல்களா அல்லது ஏதாவது தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X