இந்திய எல்லைக்குள் அத்துமீறல்-12 இலங்கை மீனவர்கள் கைது
தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்கும் மீனவர்கள் அவ்வப்போது இரு நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி தெர்மல் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் மணப்பாட்டிற்கு கிழக்கே 80 நாட்டிக்கல் மைல் தொலைவில் 5 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை கடலோர காவல் படை கப்பல் வஜ்ரா மாலை கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து மணியில் மேற்கொண்டிருந்தது. அப்போது கன்னியாகுமரியிலிருந்து கிழக்கே 45 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு படகு நிற்பதை கண்டனர்.
அங்கு விரைந்து சென்று அதிலிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தனர். மேலும் 58 நாட்டிகல் தொலைவில் மற்றொரு படகு நிற்பதை கண்டு அதிலிருந்த 6 இலங்கை மீனவர்களையும் கைது செய்தனர். இவர்கள் 12 பேரும் தூத்துக்கடி கொண்டு வரப்படுகின்றனர்.
இன்று மாலை அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவர் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications