வெப்பமயமாக்கல் விழிப்புணர்வு 8 நிமிடம் விளக்கணைத்து பிரசாரம்
சென்னை: உலக வெப்பமயமாக்கல் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு சரியாக 8 மணிக்கு விளக்குகளை அணைத்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
சரியாக எட்டு மணிக்கு ஆரம்பித்து எட்டு நிமிடங்களுக்கு பல பகுதிகளில் விளக்குகளை அணைத்திருந்தனர். நேற்று ஆகஸ்ட் 8ம் தேதி என்பதால் 08-08-08 என்பதையொட்டி இந்த பிரசாரத்திற்கு எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகள் உள்ளிட்ட பல இடங்களிலும் விளக்குகளை அணைத்து பிரசாரத்தில் மக்கள் கலந்து கொண்டனர்.
ஆளுநர் மாளிகையிலும் இந்த பிரசாரம் நடந்தது. எட்டு மணிக்கு ஆரம்பித்து எட்டு நிமிடங்கள், எட்டு விநாடிகளுக்கு விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. ஆளுநர் பர்னாலாவின் உத்தரவுப்படி விளக்குகள் அணைக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
திருச்சியிலும் ..
இதேபோல, திருச்சியிலும் நேற்று இரவு 8 மணிக்கு பெரும்பாலான பகுதிகளில் விளக்குகள் எட்டு நிமிடத்திற்கு அணைக்கப்பட்டன.
மாணவர்கள் பெருமளவில் இதில் பங்கேற்றனர். வீடு வீடாக சென்று இதுகுறித்து அவர்கள் பிரசாரமும் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications