திமுகவுடன் உறவை முறிக்க சிபிஐ, சிபிஎம் முடிவு?
சென்னை: திமுகவுடனான உறவை முறித்துக் கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான இறுதி முடிவு ஆகஸ்ட் 25ம் தேதி எடுக்கப்படுள்ளதாக இரு கட்சிகளின் மாநிலச் செயலாளர்களும் தெரிவித்துள்ளனர்.
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வழங்கி வந்த ஆதரவை இடதுசாரிகள் முறித்துக் கொண்டவுடனேயே, தமிழகத்திலும் திமுக ஆட்சிக்கு வழங்கிவரும் ஆதரவை இடதுசாரிகள் முறிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் தற்போதுள்ள நிலையே தொடரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வரதராஜன் தெளிவுபடுத்தினார். சில நாட்களுக்கு முன்பு முதல்வரை சந்தித்த அவர் அதே கருத்தையே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது இடதுசாரிகளின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற சிபிஎம்மின் கூட்டத்திற்குப் பிறகு இந்த நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய வரதராஜன், காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு வைத்திருக்கும் எந்தக் கட்சியுடனும் இடதுசாரிகள் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருந்தார். இதனால் திமுகவுடனான உறவை இடதுசாரிக் கட்சிகள் முறித்துக் கொள்ளும் என்ற பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை வரதராஜனும், சிபிஐ செயலாளர் தா.பாண்டியனும் கூட்டாக சந்தித்தனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளும் பூர்வாங்க ஆலோசனையை மேற்கொண்டன. இறுதி முடிவு ஆகஸ்ட் 25ம் தேதி எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.
25ம் தேதி இறுதி முடிவு - வரதராஜன்
வரதராஜன் கூறுகையில், காங்கிரஸுடனும், பாஜகவுடனும் அல்லது அவர்களுடன் தொடர்பு வைத்துள்ள வேறு எந்தக் கட்சியுடனும் எங்களுக்கு எந்த வேலையும் இல்லை.
தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தா.பாண்டியனுடன் ஆலோசனை நடத்தினேன்.
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட பின்னர், காங்கிரஸ், பாஜக அல்லாத புதிய கூட்டணியை உருவாக்க இடதுசாரிகள் முடிவு செய்துள்ளன. அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆகஸ்ட் 25ம் தேதி இரு கட்சிகளின் தலைவர்களும் கூடிப் பேசி இறுதி முடிவை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
தா.பாண்டியன் கூறுகையில், கூட்டணி தொடர்பாக எந்தவித கெடுவும் இல்லை. அரசியல் கெடுவுக்கு வாய்ப்பே இல்லை. இருக்கவும் முடியாது என்றார்.
அதிமுக மதவாத கட்சியல்ல - தா.பாண்டியன்
அதிமுகவுடன் கூட்டணி வருமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், திராவிடக் கட்சிகளை நாங்கள் மதவாத கட்சிகளாக பார்க்கவில்லை என்றார் பாண்டியன்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே திமுக கூட்டணியிலிருந்து விலகி விட இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், காங்கிரஸ் இடம் பெற்றுள்ள கூட்டணியில் இருந்தால், சீட் பகிர்வின்போது தர்மசங்கடமாக இருக்கும். சரியாக இருக்காது என்பதே.
மேலும் காங்கிரஸை கடுமையாக சாடிக் கொண்டு அவர்களுடன் கூட்டணியில் நீடிப்பதில் லாஜிக் இல்ைல என்பதும் இடதுசாரிகளின் எண்ணம். இதன் காரணமாகவே திமுக கூட்டணியிலிருந்து விலக இடதுசாரிகள் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
சிக்கலில் திமுக
ஏற்கனவே பாமகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றி விட்ட நிலையில், இடதுசாரிகளும் கூட்டணியிலிருந்து விலகினால் திமுக அரசுக்கு பெரும் சிக்கலாகி விடும்.
தற்போது சிபிஎம், சிபிஐ ஆகிய இரு கட்சிகளுக்கும் சட்டசசபையில் கூட்டாக 15 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் விலகினால் காங்கிரஸை மட்டுமே திமுக முழுமையாக நம்பியிருக்கும் நிலை ஏற்படும். அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால், காங்கிரஸிடமிருந்து வரும் கோரிக்கைகளை திமுகவால் நிராகரிக்க முடியாத இக்கட்டான நிலையும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்! -
Senthil Balaji: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்? -
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி..வைத்தியலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?குறுக்கே வந்த இளைஞர்.. போச்சே -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம்












Click it and Unblock the Notifications