அரசுப் பள்ளிகளுக்கு கலர் டிவி, டிவிடி வழங்க திட்டம்
திருச்சி: செயல் வழிக் கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் அரசுமேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு கலர் டிவியும், டிவிடி பிளேயரும் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்ட ஆலோசகர் விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மொத்தம் 30 ஆயிரம் பள்ளிக் கூடங்களுக்கு இந்த கலர் டிவி மற்றும் டிவிடி பிளேயர்கள் வழங்கப்படும். ஒரு மாதத்திற்குள் இவை வழங்கப்பட்டு விடும்.
இதன் மூலம் கற்பித்தல் மேலும் எளிதாகும். ஆங்கிலம் மற்றும் தமிழில் உள்ள சிடிக்கள், டிவிடிக்கள் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் போதிக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றுக் கொள்ளும் திறனும், பேச்சுத் திறனும் மேம்படும்.
முதல் கட்டமாக பத்து பள்ளிகளுக்கு இந்த சிடிக்கள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications