காயத்தால் சச்சின் நீக்கம்-பத்ரிநாத் சேர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: காயம் காரணமாக, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரிலிருந்து சச்சின் டெண்டுல்கர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் தமிழகத்தின் பத்ரிநாத் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் ஆரம்பத்திலிருந்தே சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது கொழும்பில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியின்போது வாஸ் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதனால் 3வது டெஸ்ட் போட்டியிலும் அவர் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சச்சின் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் பத்ரிநாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தியாவும், இலங்கையும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளன. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+