ஆந்திராவில் தொடர்ந்து கன மழை-வெள்ள பலி 93 ஆனது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவில் கன மழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. குண்டூர் அருகே உள்ள ஓடை வெள்ளத்தில் சிக்கி லாரி ஒன்று கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 40 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். இதனால் ஆந்திராவில் மழை வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடந்த 5ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் அம்மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

ஹைதராபாத் உள்பட ஆந்திராவின் வடக்கு கடற்கரை மற்றும் தெலுங்கானா பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்கள் இந்த மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

வெள்ளத்தில் சிக்கி 42 பேரும், வீடுகள் இடிந்து விழுந்ததில் 11 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். வீதிகளில் வெள்ளம் சூழந்துள்ளதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன.

ஹைதராபாத்-விஜயவாடா மற்றும் பத்ராசலம்-விஜயவாடா பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள வம்சதாரா மற்றும் நாகவல்லி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் இந்த மழையில் நாசமடைந்துள்ளன.

லாரி கவிழ்ந்து..

இதற்கிடையில் குண்டூர்-அமராவதி சாலையில் லாரி ஒன்று 50 பேரை ஏற்றிக் கொண்டு சென்றது. நாருகுலாபாடு ஓடையில் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிந்தது.

இதில் லாரி சிக்கி கவிழந்தது. லாரியில் பயணம் செய்த அனைவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 40 பேர் நீரில் மூழ்கி பரிதாகமாப இறந்தனர். அங்கு மீட்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் வெள்ளம், மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+