தர்மபுரி: காந்தி வேடத்தில் பிச்சை எடுத்தவர் கைது!
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரியில் காந்தி வேடமிட்டு, பிச்சை எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
வருகிற 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், நேற்று தர்மபுரி சின்னசாமி நாயுடு தெருவில் காந்தி போஸ வேடம் அணிந்த ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருத்தைப் பார்த்த சிலர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனே தர்மபுரி டவுன் போலீசார் அவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
மதுரையைச் சேர்ந்த திவ்யநாதன் மகன் திவாகர் (40) என்ற அவர் பலூன் கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், காந்தி போன்று வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து வந்தது தெரிய வந்தது.
அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications