மும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்தது-6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

தெற்கு மும்பையின் பின்தி பஜார் பகுதியில் 3 அடுக்கு கட்டடம் இன்று திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அப்பகுதியனரும் மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். கட்டடம் மிகவும் பழமையானது என்பதால் திடீரென்று இடிந்தது தெரியவந்துள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
தெற்கு மும்பை பகுதியில் 500 கட்டடங்கள் பழமையாகிவிட்டதால் மோசமான நிலையில் இருப்பதாக கடந்த 2005ம் ஆண்டே எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications