13 சதவிகித பணவீக்கம்! -ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் எச்சரிக்கை
டெல்லி: பணவீக்கம் இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை, அதிகரிக்கத்தான் செய்யும். விரைவில் 13 சதவிகிதத்தை எட்டும், ஆனால் நாட்டின் மொத்த உற்பத்தி 7.7 சதவிகிதமாகக் குறைந்துவிடும் என எச்சரித்துள்ளார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவருமான சி.ரங்கராஜன்.
இந்தியப் பொருளாதாரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. இதனால் பணவீக்கம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத மிக அதிகபட்ச அளவான 12 சதவிகித்தைத் தாண்டியுள்ளது.
அதே நேரம் நாட்டின் மொத்த உற்பத்தி மற்றும் வளர்ச்சி குறையத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் விலை நிலைகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து புதிய பொருளாதார சீரமைப்பில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ள பிரதமர் அதற்கான பரிந்துரைகளைத் தருமாறு பொருளாதார ஆலோசனைக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்னொரு பக்கம் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வங்கி இருப்பு விகிதம், வட்டி விகிதம் இரண்டையுமே முன்னெப்போதுமில்லாத அளவுக்கு 9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது ரிசர்வ் வங்கி.
இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், உடனடியாக பணவீக்கம் குறைய வாய்ப்பில்லை என்கிறார் ரங்கராஜன்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 'பணவீக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கியின் இப்போதைய பணக் கொள்கை சரியானதே. ஆனால் இது உடனடியாகப் பலனைத் தரும் என்று கூறுவதற்கில்லை. எப்படியும் விரைவில் 13 சதவிகிதம் என்ற அதிகபட்ச உயர்வை எட்டப் போகிறது பணவீக்கம்.
அதே நேரம் இப்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அளவான 8 சதவிகித பொருளாதார வளர்ச்சியை அடைவது சிரமம்தான். 7.7 சதவிகிதம் அளவுக்குதான் வளர்ச்சி இருக்கும். இந்தியாவின் பொதுக் கடன் மற்றும் பற்றாக்குறையின் அளவும்கூட இந்த ஆண்டு அதிகரிக்கத்தான் செய்யும், என்றார் ரங்கராஜன்.
சமீபத்தில்தான் தனது பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, பிரதமரிடம் கடிதம் கொடுத்துள்ளார் ரங்கராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications