ப.சி. பதவி காலம் இன்னும் 4 நாட்கள்தான்-பாஜக

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்னும் 4 நாட்களுக்குத்தான் நீடிப்பார் என்று பாஜக துணைத் தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

அமர்நாத் கோவிலுக்கு நிலம் கொடுக்கப்பட்டதை ரத்து செய்த்தை கண்டித்து காரைக்குடியில் பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது

தீவிரவாத அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தீவிரவாதிகள் விஷயத்தில் மத்திய அரசு மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது. பொடா போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தால் மட்டுமே தீவிரவாத அச்சுறுத்தல்கள் நாட்டில் குறையும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டம் தேச நலன் கருதி மீண்டும் கொண்டு வரப்படும்.

மத்திய அமைச்சரவையில் யாருக்கு என்ன பதவி என்பது திரை மறைவில் இருந்து இயக்கப்படுகிறது. அதன்படி மத்திய நிதி அமைச்சர் பதவியில் இருந்து ப.சிதம்பரம் இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே நீடிப்பார்.

காரைக்குடியில் எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்டதற்கும் பாஜகவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்த பிரச்சனையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் அந்த வழியாக வந்த இருவரை பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். இது தமிழகத்தில் போலீஸ் அராஜகம் தலைவிரித்து ஆடுவதையே காட்டுகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+