6 ஆண்டுகளாக 'டிமிக்கி': விமான நிலையத்தில் வாலிபர் கைது
சென்னை: கொலை முயற்சி வழக்கில் 6 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ராமநாதபுத்தைச் சேர்ந்த வாலிபர், துபாயில் இருந்து சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் பிடிபட்டார்.
சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்திறங்கியது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் அச்சுதானந்தாவயல் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (28) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்தனர். ராஜசேகர் மீது ராமநாதபுரம் டவுன் போலீசில் கடந்த 2002ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இருந்து தப்பிக்க அவர் துபாய் சென்றார். 6 ஆண்டுகளாக ராஜசேகரை போலீசார் தேடி வந்தனர். இந்த விவரங்களை குடியுரிமை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து ராஜசேகரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விமான நிலைய போலீசார் ராஜசேகரை கைது செய்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராமநாதபுரம் போலீஸார் சென்னை வந்து ராஜசேகரை அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications