மும்பையில் கட்டட பலி 20ஆக உயர்வு
மும்பை: தெற்கு மும்பை பகுதியில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர்.
மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் தெற்கு மும்பையின் பின்தி பஜார் பகுதியில் நான்கு அடுக்கு கட்டடம் உள்ளது. 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் 3 மற்றும் 4வது மாடிகளின் ஒரு பகுதி நேற்று திடீரென்று இடிந்து விழுந்தது.
இதில் சிக்கி 6 பேர் இறந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் சிகிச்சை பலனின்றி 8 குழந்தைகள் மற்றும் 6 பெண்கள் பரிதாமாக இறந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். தெற்கு மும்பை பகுதியில் 500 கட்டடங்கள் பழமையாகிவிட்டதால் மோசமான நிலையில் இருப்பதாக கடந்த 2005ம் ஆண்டே எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இடிந்துள்ள இந்த கட்டடம் வசிக்க லாயக்கற்றது என்றும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என்றும் வீட்டு வசதி வாரியம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. மேலும் அந்த கட்டடத்தில் வசிப்பவர்களை சீக்கிரம் காலி செய்யும்படி நோட்டீஸூம் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டடம் இடிந்து 20 உயிர்கள் பலியாகியுள்ளன.
சம்பவம் நடந்த இடத்தை அம்மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் பார்வையிட்டார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
இருட்டில் மும்பை கடலோரம் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. சர்வதேச எல்லையில் நடந்த திக் திக் ஆபரேஷன் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications