அணு ஒப்பந்தம்: சிபிஐ(எம்) மனிதச் சங்கிலி போராட்டம்
மதுரை: அணு ஒப்பந்தத்தை கண்டித்து சிபிஐ மற்றும் சிபிஎம் சார்பில் இன்று தமிழகம் முழுவதம் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது.
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு ஆகியவற்றை இடதுசாரிகள் கண்டித்து வருகின்றன. மேலும் இதை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பலவிதமான போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அக்கட்சிகள் அறிவித்தன.
அதன்படி, அணு ஒப்பந்தம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ளு நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டத்தை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்துகின்றன.
இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி 6 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்படும் என்றும் அக்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications