திருச்சி: ரூ1 லட்சம் லாட்டரி பறிமுதல்-இருவர் கைது
திருச்சி: ஈரோட்டில் இருந்து வேனில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் காவிரிக்கரை செக்போஸ்டில் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆம்னி வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் கட்டுக்கட்டாக இருந்தது.
இதையடுத்து அந்த லாட்டரி சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சமாகும். வேனில் வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம், வெள்ளசம்பட்டியை சேர்ந்த ஜெய்கணேஷ் (32), மாவட்டம் பெரியவலசையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (33) என்பதும் தெரிய வந்தது.
மேலும் லாட்டரி சீட்டுகள் ஈரோட்டில் இருந்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பெட்டி கடை நடத்தும் துரைசாமி மற்றும் பிரின்ஸ் ஆகியோருக்கு கொடுப்பதற்காக லாட்டரிச் சீட்டுகளை கொண்டு வந்ததாக இருவரும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications