நாட்டின் இப்போதைய தேவை அமைதி: பிரதீபா
டெல்லி: நாட்டில் இன்றைய தேவை அமைதிதான். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைதியான முறையில், அடுத்தவர் கருத்துக்கு மதிப்பு அளித்து நடந்து கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.
62வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதன் மூலமும், ஒத்துழைப்புடன் திகழ்வதன் மூலமும் இப்பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்.
இதன் மூலம் வலிமையான, வலுவான, பொருளாதார சக்தியாக திகழும் இந்தியாவை உருவாக்க முடியும்.
எந்தப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு நிச்சயம் உண்டு. திறந்த மனதுடன், சுமூகமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தினால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணலாம்.
மற்றவர்களின் கருத்துக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். நமது கருத்தை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நினைப்பதைப் போல நாமும் மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.
சில பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்குக் காரணம், சட்டத்ைத நாம் கையில் எடுத்துக்கொள்வதுதான். அந்தப் போக்கு நீங்க வேண்டும். எந்தப் பிரச்சினைக்கும் வன்முறை முடிவாகாது.
எரிசக்தி தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும். தேசிய வேள்வியாக இதை கருதி நாம் செயல்பட வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications