இந்திய எல்லையில் பாக் ராக்கெட் வீசி தாக்குதல்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ். புரா பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நிலைகள் மீது இன்று பாகிஸ்தான் படையினர் ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக இதில் இந்தியத் தரப்பில் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை.
ஆர்.எஸ்.புராவில் உள்ள சங்க்ரூர் அப்துல்லியான் எல்லைப் பாதுகாப்புப் படை போஸ்ட் மீது பாகிஸ்தான் படையினர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நான்கு முதல் ஐந்து ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்கினர். இதில் அவுட்போஸ்ட் லேசாக சேதமடைந்தது. இருப்பினும் வீரர்கள் யாருக்கும் காயம் ஏதும் இல்லை.
சுட்டது பாகிஸ்தான் படையினரா அல்லது தீவிரவாதிகளா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்தியா இருக்கும் நிலையில் பாகிஸ்தான் படையினர் வாலாட்டியிருக்கிறது. சமீப காலமாக அடிக்கடி எல்லை தாண்டி சுட்டு வருகிறது பாகிஸ்தான் படைகள் சுட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications