சுதந்திர தினம்-வளைகுடாவில் உற்சாக கொண்டாட்டம்
துபாய்: துபாயில் இந்திய சுதந்திர தினம் இந்திய துணைத் தூதரகத்தின் சார்பில் மிகுந்த உற்சாகத்துடன் துபாய் இந்தியப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
துபாய் இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி இந்திய தேசியச் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவரின் உரையைப் படித்தார்.
இந்த உற்சாக நிகழ்வில் ஈமான், துபாய் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இந்திய சங்கங்களின் பிரதிநிதிகளும், பல்வேறு நிறுவன ஊழியர்களும், தொழிலாளர்களும் பங்கேற்றனர். மேலும் பள்ளிக்குழைந்தைகளின் கலைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அபுதாபியில்...
இதேபோல அபுதாபி இந்திய தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய தூதர் தல்மிஷ் அஹ்மது இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் உரையினை வாசித்தார்.
பல்வேறு இந்திய சங்கங்களின் பிரதிநிதிகள், இந்திய நிறுவன பிரதிநிதிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிற பகுதிகளான ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா, புஜைரா, கல்பா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள இந்திய சங்கத்திலும் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்பகுதிகளில் உள்ள இந்தியர்கள் உற்சாகத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications