சுதந்திர தினம்: போராட்டம்-தியாகி மனைவி கைது

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய தியாகியின் மனைவி கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுக்கா ஆப்பனூர் பகுதியை சேர்ந்தவர் நீலமேகத்தேவர். சுதந்திர போராட்ட தியாகியான இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

தியாகி பென்சனையும், அதற்கான சலுகைகளையும், இவரது மனைவி ராமாத்தாள் பெற்று வருகிறார்.

கடந்த 2005 ம் ஆண்டு ராமாத்தாளுக்கு 3 செண்ட் புறம் போக்கு நிலம் அரசால் வழங்கப்பட்டது. இதற்கு உரிய பட்டாவும், வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ராமாத்தாளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், நாடாளுமன்ற தொகுதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திடீரென ஊரணி வெட்டப்பட்டது.

இது குறித்து ராமாத்தாள் அதிகாரிகளிடம் பல முறை நேரிலும், தபால் மூலம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் சுதந்திர தினத்தன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ராமாத்தாளும், அவரது மகன் கணேசனும் கறுப்புக்கொடியுடன் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர்.

இது குறித்து ஆப்பனூர் விஏஓ காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் சுதந்திர தினத்தன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற ராமாத்தாளையும் அவரது மகன் கணேசனையும் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+