சுதந்திர தினம்: போராட்டம்-தியாகி மனைவி கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய தியாகியின் மனைவி கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுக்கா ஆப்பனூர் பகுதியை சேர்ந்தவர் நீலமேகத்தேவர். சுதந்திர போராட்ட தியாகியான இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
தியாகி பென்சனையும், அதற்கான சலுகைகளையும், இவரது மனைவி ராமாத்தாள் பெற்று வருகிறார்.
கடந்த 2005 ம் ஆண்டு ராமாத்தாளுக்கு 3 செண்ட் புறம் போக்கு நிலம் அரசால் வழங்கப்பட்டது. இதற்கு உரிய பட்டாவும், வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ராமாத்தாளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், நாடாளுமன்ற தொகுதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திடீரென ஊரணி வெட்டப்பட்டது.
இது குறித்து ராமாத்தாள் அதிகாரிகளிடம் பல முறை நேரிலும், தபால் மூலம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் சுதந்திர தினத்தன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ராமாத்தாளும், அவரது மகன் கணேசனும் கறுப்புக்கொடியுடன் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர்.
இது குறித்து ஆப்பனூர் விஏஓ காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் சுதந்திர தினத்தன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற ராமாத்தாளையும் அவரது மகன் கணேசனையும் கைது செய்தனர்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications