மதிமுக பொதுக்குழு: செஞ்சி-எல்ஜிக்கு கண்டனம்
சென்னை: மதிமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று காலை நடந்தது. இன்னிசைக் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இக்கூட்டத்தில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்ணா நகரில் உள்ள விஜயஸ்ரீ மஹால் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு மதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடங்கியது. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சிக்கு முன்பாக இன்னிசைக் கச்சேரி நடந்தது. பின்னர் கூட்டத்தில், புதிய அவைத் தலைவராக கண்ணப்பன், பொருளாளராக மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளராக துரை. பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யபப்பட்டதற்கு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து 3 பேருக்கும் வைகோ பொன்னாடை போர்த்தி வரவேற்று, வாழ்த்து தெரிவித்தார்.
அதன் பின்னர் பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசத் தொடங்கினர். அரசியல் விவாதங்களும் நடந்தன.
கூட்டத்தில், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு பின்னர் நீக்கப்பட்ட செஞ்சி ராமச்சந்திரன்,எல்.கணேசன் ஆகியோரை கடுமையாக சாடி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
புதிய அவைத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு ஒப்புதல், பாராட்டு, எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோருக்கு கண்டனம், அரசியல் நிலவரம், கட்சி செயல்பாடு, கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ம.தி.மு.க. பொதுக்குழு முடிவு மற்றும் தீர்மான விவரங்களை வைகோ இன்று மாலை செய்தியாளர்களிடம் தெரிவிப்பார்.
முன்னதாக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த வைகோவுக்கு மதிமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications