மும்பை- கட்டடம் இடிந்து பெண் பலி, இடிபாடுகளில் பலர்
மும்பை: மும்பையில் கட்டடம் இடிந்து விழுந்து இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
தெற்கு மத்திய மும்பையின் பைகுல்லா பகுதியில் உள்ள ஓரடுக்கு மாடி கட்டடம் இன்று காலை 5 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. தகவலறிந்து போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இடிபாட்டில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்து 20 வயது மதிக்கத்தக்க பெண்ணை மீட்டனர். படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
கடந்த ஒரு மாதமாக மும்பையில் மழை பெய்து வருகிறது. கடந்த ஆறு நாட்களில் 3 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில் இரண்டு சம்பவங்கள் தெற்கு மத்திய மும்பை பகுதியில் நிகழ்ந்தவையாகும். இதில் 22 பேர் பரிதாபமாக பலியாயினர்.
இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் வாழ லாயக்கற்றது, எப்போது வேண்டுமானாலும் இடியும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தனை சம்பவங்கள் நடந்தும் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான இடம் ஒதுக்கப்படவில்லை. மக்களும் வெளியேறாமல் உள்ளனர்.












Click it and Unblock the Notifications