ஜோதிட விபரீதம்-6 வயது மகனை கொன்ற தந்தை

Subscribe to Oneindia Tamil

ஓட்டப்பிடாரம்: மகன் பிறந்த நேரம் சரியில்லை என ஜோதிடர் ஒருவர் கூறியதை நம்பி, தனது 6 வயது மகனை கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன். கட்டிட தொழிலாளி. இவரது மகன் காளிராஜ் (6). ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த இரண்டு தினங்களுக்கு பின்புறம் வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்த காளிராஜ் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் காளிராஜ் உடல் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்த்த காளிராஜின் தாய் பேச்சியம்மாள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

தகவலறிந்த ஒட்டபிடாரம் போலீசார் காளிராஜின் தந்தை அன்பழகன், தாய் பேச்சியம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அன்பழகன் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து மகனை தானே கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்ததாக அன்பழகன் ஒப்புக் கொண்டார். விசாரணையில் அவர் கூறியதாவது: எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு. கடந்த வாரம் ஜோதிடம் பார்த்தபோது, உன் மகன் பிறந்த நேரம் சரியில்லை. குடும்பத்தில் அதிக கஷ்டம் ஏற்படும். குடும்பத்துக்கும் ஆகாது என்று ஜோதிடர் கூறினார். அதனால்தான் மகனை கொலை செய்தேன் என்றார்.

இதையடுத்து அன்பழகனை போலீசார் கைது செய்தனர். அவர் குறிப்பிட்ட அந்த ஜோதிடரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+