ஸ்டாலினை பின் தொடர்வதில் போட்டி: கார்கள் மோதல்-சப் கலெக்டர் காயம்
புதுக்கோட்டை: அமைச்சர் ஸ்டாலினின் காரை பின் தொடருவதில் போட்டி போட்டுக் கொண்டு வந்தபோது அமைச்சர் செல்வராஜின் காரும், புதுக்கோட்டை சப்-கலெக்டரின் காரும் மோதிக் கொண்டன. இதில் சப்-கலெக்டர் படுகாயமடைந்தார்.
பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டைக்கு வந்தார். காரில் சென்று பணிகளை பார்வையிட்டார். அப்போது அவரது காரை பின் தொடர்ந்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கார்கள் போட்டி போட்டுக் கொண்டு அணி வகுத்துச் சென்றன. இதில் கார்கள் பயங்கரமாக சீறிப்பாய்ந்தன.
புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அதில் ஒரு கார் மட்டும் திடீரென்று திடீரென நின்றது. இதனால் பின்னால் வந்தால் கார்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதியன.
இதில் தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் காரும், புதுக்கோட்டை சப்-கலெக்டர் முத்துவீரன் காரும் பயங்கரமாக மோதின. இதில் இருவரது காரின் முன் மற்றும் பின் பகுதிகள் நொறுங்கியன. இந்த விபத்தில் சப்-கலெக்டர் முத்துவீரன் படுகாயம் அடைந்தார்.
அவர் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.












Click it and Unblock the Notifications