நேபாள பிரதமராக பிரசந்தா பதவியேற்றார்
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: நேபாள குடியரசின் முதல் பிரதமராக புஷ்ப கமல் தஹால் என்கிற பிரசந்தா பதவியேற்றுக் கொண்டார்.
மன்னராட்சி ஒழிக்கப்பட்ட நிலையில் நடந்த முதல் ஜனநாயகத் தேர்தலில் பிரசந்தா தலைமையிலான மாவோயிஸ்ட் கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் பிரசந்தா பிரதமராக அறிவிக்கப்பட்டார். நேற்று அவர் பதவியேற்றுக் கொண்டார். சிதால் நிவாஸில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த விழாவில் பிரசந்தாவுக்கு ஜனாதிபதி ராம் பரன் யாதவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நேபாள நாட்டு பாரம்பரிய உடையில் இல்லாமல், மேற்கத்திய பாணி உடையில் பிரசந்தா பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications