முஷாரப்பை கொல்ல அல்கொய்தா-தலிபான்கள் தீவிரம்

நேற்று முஷாரப் பதவி விலகியதை பாகிஸ்தான்-ஆப்கான் எல்லைப் பகுதியில் தலிபான்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந் நிலையில் முஷாரப்பை காலி செய்ய அல் கொய்தாவும் தலிபான்களும் உறுதிமொழி எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவியில் இருந்தபோது 9 முறை அவரை குண்டு வைத்துக் கொல்ல முயற்சிகள் நடந்தன. ஆனால், முஷாரப் தப்பிவிட்டார்.
இப்போது பதவி போய்விட்ட நிலையில் பாதுகாப்பு குறையும் நிலை உள்ளதால் முஷாரப்பின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லால் மஸ்ஜித்தில் தீவிரவாதிகள் வேட்டை என்ற பெயரில் ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில் பல சிறார்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் பலியாயினர்.
அதற்கு பழிக்குப் பழியாக முஷாரப்பை தேடிப் பிடித்து கொன்று நரகத்துக்கு அனுப்ப வேண்டும் என லால் மஸ்ஜித் மசூதியின் தலைமை நிர்வாகியான மெளலானா மெஹ்ராஜ் கூறியுள்ளார்.
அதே போல தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் மெளல்வி உமர் கூறுகையில், அமெரிக்காவுக்கு உதவிய முஷாரப்புக்கு மிகக் கடுமையான தண்டனை தரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள ஜாமியா முகமிதா மதரஸாவின் தலைவரான மெளலானா அமீர் கூறுகையில், முஷாரப் பலரை கொன்று குவித்துள்ளார். இதனால் அவரைக் கொல்வதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications