25ம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம்-தப்புவாரா ரங்கசாமி?
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் புதுச்சேரி காங்கிரஸ் சட்டசபை கட்சிக் கூட்டம் வருகிற 25ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தனது பெரும்பான்மையை ரங்கசாமி நிரூபிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் புதுவை ஆழ்ந்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைவருமே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நாளுக்கு நாள் கோஷ்டிப் பூசல் அதிகமாகி வந்ததால், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி ஆதரவை நிரூபிக்குமாறு ரங்கசாமிக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டது.
இதையடுத்து வருகிற 25ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்ைத புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் உறுதிப்படுத்தியுள்ளார். கூட்டத்தில் அகில இந்திய பார்வையாளர்கள் வயலார் ரவி, அருண்குமார், கே.பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர் என்றார் அவர்.
இக்கூட்டத்தில் ரங்கசாமி தனது ஆதரவை நிரூபிப்பார். அதன் அடிப்படையில் அவர் முதல்வராக நீடிப்பாரா அல்லது விலகுவாரா என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications