வாக்காளர் சேர்ப்பு: நாளை கடைசி-நரேஷ்குப்தா
மதுரை: புதிய வாக்காளர்கள், விண்ணப்பிக்க நாளைதான் கடைசி நாள். இனி கால நீடிப்பு கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
மதுரை, தேனி, திண்டுக்கல், உள்பட 9 மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது
புதிய வாக்காளர்களை சேர்க்க ஆகஸ்ட் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இனி கால நீடிப்பு கிடையாது. ஏற்கனவே மூன்று முறை கால நீடிப்பு வழங்கப்பட்டுவிட்டது.
ஆகஸ்ட் 28ம் தேதி வரை சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். துணைத் தேர்தல் அலுவலர்கள் முறையாக பணியாற்ற வேண்டும். அவ்வாறு பணியாற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு குறைகள் இருந்தால் அதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம். எங்களுக்கு என்று தனி பணியாளர்கள் கிடையாது. மற்ற துறை ஊழியர்களை வைத்துதான் பணியாற்றுகின்றோம். மேலும், பணியாளர்கள் தேவைப்படுவதால் ஆசிரியர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.