காஷ்மீர் பகுதியில் பாக்ஸ்தானின் தொடரும் அத்துமீறல்
ஜம்மு: காஷ்மீரின் நவ்ஷெரா பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்திய எல்லையில் தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக எல்லையில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரின் நவ்ஷெரா பகுதியில் பாகிஸ்தான் படையினர் திடீரென மார்ட்டர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். காலை 6.40 மணிக்குத் தொடங்கிய இந்த தாக்குதல் 45 நிமிடங்கள் நீடித்தது. மொத்தம் 6 குண்டுகள் வந்து விழுந்தன.
இதுகுறித்து இந்திய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கோஸ்வாமி கூறுகையில், இந்த தாக்குதலுக்கு இந்தியா பதில் தாக்குதல் நடத்தவில்லை. தாக்குதலை எதிர்கொண்டு அடக்குவதற்கு வீரர்கள் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தனர்.
இந்த தாக்குதலால் எந்த உயிர்சேதமும், பொருள் சேதமும் இல்லை. எதிரிகளின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் வீரர்கள் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications