காணாமல் போன மீனவர்கள்-ஹெலிகாப்டரில் தேடுதல்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கடலில் காணாமல் போன மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 18 ம் தேதி 685 விசைப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
இதில் பெரும்பாலான மீனவர்கள் கரைக்கு திரும்பிவிட்டனர்.
ஆனால், மண்டபம் பகுதியை சேர்ந்த சங்கர், பாலா, உள்பட 16 பேர் கரை திரும்பவில்லை. இதனால் இவர்களது உறவினர்கள் இது குறித்து மீன் வளத்துறை அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை ஹெலிப்காப்டர் மூலம் தேடும் பணியில் கடற்படை மேற்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications