பாகிஸ்தான் தற்கொலை தாக்குதல்-பலி 65 ஆனது
இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத் அருகே உள்ள ராணுவ குண்டு தயாரிப்பு ஆலை வளாகத்துக்கு வெளியில் நடந்த இரு தற்கொலைப் படைத் தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே, டக்ஸிலா என்ற இடத்தில் வாக் கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவ ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. விமான எதிர்ப்பு குண்டுகள், பீரங்கி குண்டுகள் உள்பட ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அங்கு உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் அந்த வளாகத்துக்குள் நுழைந்த இரு தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இதில் 11 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். பலர் காயமடைந்தனர். அதிலும் பலர் உயிரிழந்துவிட்டனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 30க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.












Click it and Unblock the Notifications