சீனாவில் மீண்டும் நிலநடுக்கம்: 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: சீனாவில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து 3 பேர் பலியாயினர். மேலும் சுமார் 1 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அதே பகுதியில் தான் இரு நாட்களுக்கும் முன்னரும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 புள்ளிகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.
இதில் 3 பேர் பலியானதோடு ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து இப் பகுதியில் இருந்து சுமார் 1 லட்சம் பேரை வீடுகளை விட்டு சீன அரசு வெளியேற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications