அதிபர் பதவி: வேட்பாளரானார் சர்தாரி- ஷெரீப் கடுப்பு

இந் நிலையில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் அந்தக் கட்சியின் இணைத் தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவருமான அசிப் அலி சர்தாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய நிர்வாக கமிட்டி கூட்டத்தில் சர்தாரி ஒருமனதாக அதிபர் பதவி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், இதற்கு ஆளும் கூட்டணி அரசுக்கு ஆதரவு தந்து வரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீபின் ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை.
எந்தக் கட்சியையும் சாராத ஒருவரைத் தான் அதிபராக்க வேண்டும் என நவாஸ் கூறி வருகிறார். மேலும் முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும், அதன் பின்னரே அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது குறித்து பேச முடியும் என நவாஸ் நிபந்தனை போட்டுள்ளார்.
இதற்கிடையே நவாஸ் கட்சியின் ஆதரவு இல்லாமலேயே, பிற சிறிய கட்சிகளின் துணையோடு அதிபராகும் முயற்சிகளில் சர்தாரி ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக பல கட்சிகளுடனும் பேசி வருகிறார்.
இதனால் சர்தாரி-நவாஸ் மோதல் மீண்டும் தீவிரமாகியுள்ளது. கூட்டணியை விட்டு வெளியேறி ஆட்சியைக் கவிழ்ப்பேன் என நவாஸ் அவ்வப்போது மிரட்டி வருவது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications