கருணாநிதியை மக்கள் தூக்கி எறிவார்கள்: ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: விலைவாசி உள்ளிட்ட மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் இருக்கும் கருணாநிதியை அடுத்த தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள் என்று அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை, பெரம்பூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது, மக்கள் இதனால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கும் கெட்டுவிட்டது. ஆனால் முதல்வர் கருணாநிதி இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய மகனை முதல்வராக்குவதிலேயே அக்கறையாக உள்ளார். மக்களைப் பற்றி கவலைப் படாத அவரை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள்.
திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிவிட்டது. கம்யூனிஸ்ட்டுகளும் விலகப் போகிறார்கள். விரைவில் காங்கிரஸ் கட்சியும் விலகிவிடும். அதன் பிறகு திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications