தேர்தல்-ராகுல் தலைமையில் உ.பி காங். ஆலோசனை
அலகாபாத்: உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் நாளை நடக்கிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தேர்தலை சந்திப்பது, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது.
இதற்காக உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்பு கமிட்டிக் கூட்டம் நாளை நடக்கிறது. முக்கிய முடிவுகளை எடுக்கும் இந்த கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தலைமையில் நடக்கிறது.
முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி, போட்டியிடும் இடங்கள், வேட்பாளர்களின் பெயர்கள் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தை தொடர்ந்து பொது தேர்தலுக்கான முதல் பிரசாரத்தை உத்தர பிரதேசத்தில் இருந்தே தொடங்குகிறார். ஒரு மாநில காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டத்திற்கு ராகுல் தலைமை வகிப்பது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications