கொலையான ரூசோ மனைவி்க்கு அரசு பதவி
Subscribe to Oneindia Tamil
தேவகோட்டை: கொலையான தேவகோட்டை ஒன்றிய திமுக இளைஞரணி தலைவர் ரூசோவின் மனைவி ஜோன்ஸூக்கு அரசு சேமிப்பு கிடங்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ரூசோ கொலை வழக்கு. அரசியல் காரணங்களுக்காக இவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இதையடுத்து இவரது மனைவி ஜோன்ஸ் ரூசோ சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து திமுகவில் இருந்தாலும் கூட தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.
சமீபகாலமாக திமுக கூட்டங்களில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு சேமி்ப்பு கிடங்குகள் அலுவல்சாரா தலைவராக ஜோன்ஸ் ரூசோ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications