மதுரை தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: அரசு உதவி பெறும் கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மதுரை தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

மதுரையில் அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுவது குறித்த சட்ட முன்வடிவு கூட்டம் நடைபெற்றது. மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

காலை முதலே மாணவர்கள், பேராசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் தங்களது எதிர்பை எழுத்துப் பூர்வமாக அளித்தனர். அனுமதிச் சீட்டு வழங்கப்பட்ட பலர் உள்ளே அனுமதிக்கப்படாததால் மாணவர்கள் அதிர்ச்சியும், ஆவேசமும் கொண்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. ஆவேசம் அடைந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதில் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். இதனால் மாணவர்கள் மேலும் ஆவேசம் அடைந்தனர். பின்னர் ஒருவாறு நிலைமை சீரடைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+