துபாய் தீ விபத்தில் 10 இந்தியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil

துபாயின் டெய்ரா என்ற இடத்தில் இந்த தீவிபத்து நடந்தது. இரவு முழுவதும் நடந்த மீட்புப் பணியில் 11 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
தீவிபத்து நடந்த இடம் மிகவும் பழமையான கட்டடம் ஆகும். அங்குள்ள முதல் மாடியில் தொழிலாளர்கள் பலர் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்தக் கட்டடம் அப்படியே இடிந்து விழுந்து விட்டது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
விபத்தில் கட்டடம் முழுமையாக சேதமடைந்து விட்டது. தற்போது இறந்த இந்தியர்களின் அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications