Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கார்டை காட்டினால் 400 மூடை சிமெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1000 சதுர அடிக்கும் குறைவாக புதிய வீடு கட்டுவோர் ரேஷன் கார்டை காட்டி 400 மூடை சிமெண்ட் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் மேற்கொள்ளாத புதிய நடவடிக்கையாக 1000 சதுர அடிக்குக் குறைவாக வீடு கட்டுவோருக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குகள் மூலமாக,

அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடத்தின் அடிப்படையில், ஒரு மூட்டை ரூ. 200 வீதம் சலுகை விலையில் 400 மூட்டை சிமெண்ட் மூட்டைகளை வழங்கிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி சிமெண்ட் வழங்கப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து வீடு கட்டும் சாதாரண, நடுத்தர குடும்பங்களைச் ேசர்ந்த மக்கள் எளிதாகப் பயன் பெறும் வகையில், விதிகளைத் தளர்த்தி அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடத்திற்குப் பதிலாக குடும்ப அட்டையின் அடிப்படையிலேயே சிமெண்ட் பெற்று புதிய வீடுகட்டுவதற்கு 100 மூட்டை வரையிலும், பழைய வீட்டைப் பராமரிக்கும் பணிகளுக்கு 50 மூட்டையும் வழங்கிட 28.6.2008 அன்று முதல்வர் கருணாநிதி ஆணையிட்டார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குகள் மூலம் சிமெண்ட் விநியோகம் செய்யும் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்குடன், புதிய வீடு கட்டுவோருக்குக் குடும்ப அட்டையின் அடிப்படியைலேயே இனி 400 மூட்டை வரை சிமெண்ட் வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் தங்களுக்குத் தேவைப்படும் 4000 மூட்டை சிமெண்ட் எந்தவித இடையூறுமின்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து குடும்ப அட்டைகள் மூலமாகவே பெற்றுப் பயன் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+