1996, 2000ம் ஆண்டு ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற ஆர்பிஐ முடிவு

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் மிகப் பெரிய கள்ள நோட்டு கும்பல் பிடிப்ட்டது. அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளில், 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை போன்ற கள்ள நோட்டுகள் அதிகம் இருந்தன. பல கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை இந்த கும்பல் புழக்கத்தில் விட்டிருக்கக் கூடும் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந் நிலையில் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை ஒழிப்பதற்காக கடந்த 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் அச்சிடிக்கப்பட்ட 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை முற்றிலுமாக திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் அல்பனா கிலாவாலா கூறியிருப்பதாவது:
இதனால் இந்த நோட்டுகள் செல்லாது என்று மக்கள் பீதியடையத் தேவையில்லை. இந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இடைத் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். நேரடியாக வங்கிகளை தொடர்பு கொண்டு புதிய நோட்டுகளை பெற்று கொள்ளலாம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
பொதுமக்களிடம் உள்ள இந்த நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டால் மீண்டும் இவை புழக்கத்திற்கு வராது. அதற்கு பதிலாக 2006ம் ஆண்டு வெளியான மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும். அதில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளன. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும். பின்னர் சிறிய தொகை நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றார்.
1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் அச்சடிக்கப்பட்ட நோட்டுகளை படிப்படியாக ஓரங்கட்டும் பணியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. இந்த பணி முற்றிலுமாக நடைபெற்ற பிறகு இவற்றை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிக்கும். அப்போதுதான் இந்த நோட்டுகள் செல்லாதவையாகும்.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications