1996, 2000ம் ஆண்டு ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற ஆர்பிஐ முடிவு

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் மிகப் பெரிய கள்ள நோட்டு கும்பல் பிடிப்ட்டது. அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளில், 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை போன்ற கள்ள நோட்டுகள் அதிகம் இருந்தன. பல கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை இந்த கும்பல் புழக்கத்தில் விட்டிருக்கக் கூடும் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந் நிலையில் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை ஒழிப்பதற்காக கடந்த 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் அச்சிடிக்கப்பட்ட 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை முற்றிலுமாக திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் அல்பனா கிலாவாலா கூறியிருப்பதாவது:
இதனால் இந்த நோட்டுகள் செல்லாது என்று மக்கள் பீதியடையத் தேவையில்லை. இந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இடைத் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். நேரடியாக வங்கிகளை தொடர்பு கொண்டு புதிய நோட்டுகளை பெற்று கொள்ளலாம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
பொதுமக்களிடம் உள்ள இந்த நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டால் மீண்டும் இவை புழக்கத்திற்கு வராது. அதற்கு பதிலாக 2006ம் ஆண்டு வெளியான மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும். அதில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளன. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும். பின்னர் சிறிய தொகை நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றார்.
1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் அச்சடிக்கப்பட்ட நோட்டுகளை படிப்படியாக ஓரங்கட்டும் பணியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. இந்த பணி முற்றிலுமாக நடைபெற்ற பிறகு இவற்றை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிக்கும். அப்போதுதான் இந்த நோட்டுகள் செல்லாதவையாகும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications