28 இலங்கை மீனவர்களுக்கு சிறை தண்டனை
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: இலங்கையைச் சேர்ந்த 28 மீனவர்களுக்கு ராமநாதபுரம் கோர்ட் 12 வார சிறைத் தண்டனை விதித்துள்ளது.
ஜூன் 20ம் தேதி கன்னியாகுமரி கடல் பகுதியில், 6 விசைப் படகுகளுடன் இந்த 28 மீனவர்களும் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இந்திய கடலோரக் காவல் படை பிடித்தது.
பின்னர் அனைவரும் ராமநாதபுரம் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, 28 மீனவர்களுக்கும் 12 வார கால சிறை தண்டனை, தலா ரூ. 2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்பைத் தொடர்ந்து அனைவரும் மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.
தீர்ப்பையொட்டி ராமநாதபுரம் கோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications