'டீசல்'-லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை
சேலம்: டீசல் தட்டுப்பாட்டை போக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பழனிச்சாமி கூறியதாவது:
தமிழகத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகிறது. லாரி தொழிலை நம்பி பல ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் டீசலுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. பல பெட்ரோல் பங்குகளில் அதிக பட்சமாக 50 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்படுகிறது.
500 கி.மீ. தொலைவிற்கு சரக்கை ஏற்றிச் செல்லும் லாரிகள் 15 இடங்களில் டீசல் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தேவையற்ற காலவிரயம், அதிக செலவு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
எனவே, இந்த பிரச்சனைக்கு அரசு உடனடி தீர்வு காண வேண்டும். இல்லையெனில் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்பட அதன் சார்பு சங்கங்கள் அனைத்தும் இணைந்து போராட்டம் நடத்த நேரிடும் என்றார்.












Click it and Unblock the Notifications