For Quick Alerts
For Daily Alerts
Just In
சிரஞ்சீவி கட்சியைப் பதிவு செய்ய தடை நீங்கியது
சிரஞ்சீவி சமீபத்தில் திருப்பதியில், தனது பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து கட்சியைப் பதிவு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் அதே பெயரில் ஏற்கனவே சென்னகிருஷ்ணா விண்ணப்பம் கொடுத்திருந்ததால் சிரஞ்சீவியின் கட்சிப் பெயரை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்ன கிருஷ்ணா, தேர்தல் ஆணையத்தை அணுகி தனது முந்தைய விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதாக கூறி மனு செய்தார். இதையடுத்து சிரஞ்சீவி தனது கட்சிப் பெயரை பதிவு செய்ய ஏற்பட்ட தடை விலகி விட்டது.
Comments
Story first published: Saturday, August 30, 2008, 11:50 [IST]