விசாகப்பட்டனம்-11 இலங்கை மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
விசாகப்பட்டனம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனம் அருகே 11 இலங்கை மீனவர்களை இந்திய கடலோரக் காவல் படை பிடித்து விசாகப்பட்டனம் போலீஸாரிடம் ஒப்படைத்தது.
விசாகப்பட்டனம் கடல் பகுதியில், இந்திய எல்லைக்குள் நுழைந்த ஹேவான், பெர்னாண்டோ, ஜட்மில் ராய், பெரேரா, மக்சில் பெர்னாண்டோ, ரஞ்சித் பெரேரா, கல்ரிகன், கந்திலால், லால் பெர்னாண்டோ, பேபி ஆகியோரை அவர்களது இரு படகுகளுடன் கடலோரக் காவல் படையினர் பிடித்தனர்.
இன்று அவர்களை விசாகப்பட்டனம் துறைமுக போலீஸாரிடம் கடலோரக் காவல் படையினர் ஒப்படைத்தனர். அவர்களைக் கைது செய்த போலீஸார் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளனர்.
எதிர்பாராதவிதமாக இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் நுழைந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications