For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவுட்சோர்சிங்: ஓபாமா எதிர்ப்பு-இந்தியா கவலை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்சிங்கை கைவிட வேண ்டும். அமெரிக்கர்களையே தொழில் நிறுவனங்களில் பயன்படுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சி அதிபர் தேர்தல் வேட்பாளர் பாரக் ஓபாமா கூறியுள்ளார்.

இதுகுறித்து பாரக் ஓபாமா ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்சிங்கை கைவிட வேண்டும். அமெரிக்கர்கள் மயமாக தொழில் நிறுவனங்கள் இருக்க வேண்டும்.

நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவுட்சோர்சிங் செய்யும் அமெரிக்க கம்பெனிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை ரத்து செய்வேன்.

அமெரிக்க வேலை வாய்ப்புகள் வெளிநாட்டினரிடம் ஒப்படைக்கப்படுவதை தடுப்பேன். அவுட்சோர்சிங் செய்யாத அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும என்றார் அவர்.

ஓபாமாவின் இந்தப் பேச்சு இந்திய தொழில் துறையினரை குறிப்பாக ஐடி துறையினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சாப்ட்வேர் நிறுவனங்களுக்கான அமைப்பான நாஸ்காம் ஒபாமாவின் இந்த கருத்து கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க நிறுவனங்களே முடிவு செய்ய வேண்டும் என்றும், நாஸ்காம் தலைவர் சாம் மிட்டல் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X