வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பீகார்: மீட்புப் பணியில் முப்படைகள்
பாட்னா: வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பீகார் மாநிலத்தில் முப்படையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை வெள்ளத்திற்கு 76 பேர் உயிரிழந்துள்னர். 3.5 லட்சம் பேர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் பெரு மழையால் கோசி ஆறு வெள்ளக் காடாகியுள்ளது. இதன் காரணமாக மாதேபுரா, சுபால், அராரியா, சாஹர்ஸா ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
வெள்ளத்திற்கு இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர். 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.5 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசு அமைத்துள்ள 162 நிவாரண முகாம்களில் இதுவரை 1.12 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மாதேபுரா மாவட்டத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மிர்கஞ்ச் பகுதியில் 20பேர் இறந்தனர். இந்த மாவட்டத்தில் தான் அதிகஅளவிலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 34 பேர் இறன்துள்ளனர்
16 மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 755 கிராமங்கள் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications