பொது செயல் திட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றம்: மன்மோகன் சிங்
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பொது செயல் திட்ட வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில், நேற்று சிறு, நடுத்தர மற்றும் குறு தொழிலதிபர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளில், பொது செயல் திட்டத்தில் கூறிய பல உறுதிமொழிகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றி விட்டது.
நாடு மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கு சிறு தொழிலதிபர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தேசிய பொது செயல் திட்டத்திலும் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய அளவிலான மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் பல்வேறு நீண்ட கால பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு கண்டுள்ளது. 2020ம் ஆண்டுக்குள் 50 கோடி இளைஞர்களை நன்கு பயிற்சி பெற்ற திறமைசாலிகளாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம்.
பள்ளிகளில் வகுப்பு நேரங்களுக்குப் பின்னர் இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்கான தொழில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நான் கேட்டுக் கொள்கிறேன்.
அரசுப் பள்ளிகள், கல்லூரிள் உள்ளிட்டவற்றை இளைஞர்களுக்கான திறன் வளர்ச்சி பயிற்சிக்காக, வகுப்பு நேரங்களுக்குப் பின்னர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன் என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications