3 வயது சிறுமியிடம் சில்மிஷம் - 54 வயது நபர் கைது
திருப்பூர்: மூன்று வயது சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம் 54 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், திருப்பூர் அருகே உள்ள கருவம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சத்தியபாமா. இவர்களது மகள் ஜெயமாலினி (3).
இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் இக்பால் (54), கூலித் தொழிலாளி. இக்பாலின் மனைவி கடந்த 2 வாரத்திற்கு முன் இறந்துவிட்டார். அதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று முன் தினம் இரவு தனது வீட்டின் முன்னால் ஜெயமாலினி விளையாடிக் கொண்டிருந்தாள். இக்பால், சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு செக்ஸ் வக்கிரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் குழந்தை ஜெயமாலினி கதறி அழுதுள்ளாள். அவளது அழுகுரல் கேட்டு, சத்தியபாமா வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார். அப்போது இக்பாலின் வீட்டின் உள்ளே இருந்து அழுகுரல் வந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உடலில் காயங்களுடன் ஜெயமாலினி அழுது கொண்டிருந்தாள்.
இதையடுத்து அவளை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஜெயமாலினியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இக்பாலை கைது செய்தனர்












Click it and Unblock the Notifications